அரசு மருத்துவமனையில் வேலை.. அப்ளை பண்ண 1-ம் தேதி கடைசி நாள்..!
அரசு மருத்துவமனையில் வேலை.. அப்ளை பண்ண 1-ம் தேதி கடைசி நாள்..!;
கோவை அரசு மருத்துவமனையில் என்.ஹெச்.எம். மூலம் ஒதுக்கப்பட்ட 18 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது: “கோவை அரசு மருத்துவமனையில் என்.ஹெச்.எம். மூலம் ஒதுக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளது.
இதில், பன்முக பணியாளர்- 2, மருத்துவ உதவியாளர்- 4, பன்முக சுகாதார பணியாளர்கள்- 8, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்- 2, கதிரியக்கவியல் துறை நிபுணர்- 2 என, மொத்தம் 18 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
விருப்பமுள்ள நபர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றிதழ்களுடன், ‘முதல்வர், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை-18' என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.