சிறையிலேயே காதலியை மணந்தார் ஜூலியன் அசாஞ்சே !

சிறையிலேயே காதலியை மணந்தார் ஜூலியன் அசாஞ்சே !

Update: 2022-03-24 16:15 GMT

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். அசாஞ்சே 10 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமான அமெரிக்க ராணுவ பதிவுகள் மற்றும் ராஜதந்திர விவகாரங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டார். ராணுவ ரகசியங்கள் வெளியிட்டது தொடர்பாக அவர் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

அவ்வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்த முயன்றனர். எனினும் ஜூலியன் அசாஞ்சே தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அவரை நாடு கடத்த அமெரிக்க முயன்று வருகிறது. 

இந்த நிலையில்,  50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்மார்ஷ் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமணம் நடைபெற்றது. சிறைச்சாலையில் நடந்த  திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்தது.


newstm.in

 

 

Tags:    

Similar News