கபடி வீரர் உயிரிழப்பு – முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி!!

கபடி வீரர் உயிரிழப்பு – முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி!!;

Update: 2022-07-27 17:15 GMT

கடலூரில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த வீரர் சஞ்சய் () விமல்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் () விமல்ராஜ் (வயது 21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் () விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Similar News