பள்ளிக் கல்விக்கு காமராஜர்.. உயர் கல்விக்கு கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!
பள்ளிக் கல்விக்கு காமராஜர்.. உயர் கல்விக்கு கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!
சென்னை அடுத்த பையனூரில் தனியார் பல்கலைக்கழக கட்டிட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; “உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. உயர்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்றால் உயர் கல்விக்கு கலைஞர். உயர்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன்.
உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் ‘நான் முதல்வன் திட்டம்” என்று அவர் கூறினார்.