லீவு வேணும்னா படுக்கைக்கு அழைக்கிறார்.. எஸ்பி அலுவலக பெண் ஊழியர் புகார்..!

லீவு வேணும்னா படுக்கைக்கு அழைக்கிறார்.. எஸ்பி அலுவலக பெண் ஊழியர் புகார்..!

Update: 2022-06-02 10:40 GMT

கர்நாடக மாநிலம் கொப்பல் எஸ்பி அலுவலகத்தில் ‘டி’ குரூப் ஊழியராக பணிபுரியும் விதவை ஒருவர், உதவி நிர்வாக அதிகாரி மல்லிநாத் (45) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “அனுதாபத்தின் அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்துள்ளது. மல்லிநாத் எனக்கு தினமும் பாலியல் தொந்தரவு தருகிறார்.

விடுமுறை வேண்டும் எனக் கேட்டால், ‘உனக்கு கணவன் இல்லை; உனக்கு எதுக்கு விடுமுறை, நான் உன் வீட்டுக்கு வரவா..?’ என்கிறார்.

‘விடுமுறை வேண்டும் என்றால் என்னுடன் இரவு லாட்ஜுக்கு வர வேண்டும். உனக்கு பணமும், சுகமும் தருகிறேன்’ என்கிறார். மறுத்தால், சம்பளத்தில் கை வைக்கிறார்.

இது குறித்து கடந்த 2019-ல் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதைய எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.

Similar News