பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி..! பிரபல நடிகர் மீது மனைவி பகீர் புகார் !!

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி..! பிரபல நடிகர் மீது மனைவி பகீர் புகார் !!

Update: 2022-04-16 09:02 GMT

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமாகி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ஜானி டெப். கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதபாத்திரத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் ஜானி டெப்.
 
இவர் கடந்த 1983ஆம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். பின்னர் அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்த ஜானி டெப், 2017 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். ஆனால் ஜானி டெப் சும்மா இருக்கவில்லை. 

நடிகையான அம்பெர் ஹெர்ட், ஜானி டெப் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார். தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்து இருக்கிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகினறனர்.
 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பெர் ஹெர்ட் கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, தனது உறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக கடுமையான டார்ச்சர் கொடுத்தார் ஜானி டெப் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதன் காரணமாக தனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றதாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.

மற்றவர்களை போல நானும் ஜானி டெப் நல்லவர் என நம்பித் தான் திருமணம் செய்தேன். ஆனால், குடி போதையில் அவர் கொடுக்கும் டார்ச்சர்கள் பிடிக்காமல் போனதால் தான் விவாகரத்து முடிவுக்கே வந்துள்ளேன் என ஆம்பர் ஹெர்ட் கூறியுள்ளார். ஜானி டெப் அவர் கூறியுள்ள இந்த பகீர் குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

newstm.in

    

Tags:    

Similar News