மூன்று மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு..!
மூன்று மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு..!
தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ‘முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது’ என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நேற்று பதிவான 234 கொரோனா பாதிப்புகளில், குருகிராமில் மட்டும் 198 பேருக்கும், பரிதாபாத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, “பரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று, ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.