அமைச்சர் சேகர் பாபுவின் வரலாற்று சாதனை… அசந்து போன மக்கள்!!

அமைச்சர் சேகர் பாபுவின் வரலாற்று சாதனை… அசந்து போன மக்கள்!!

Update: 2022-05-24 07:49 GMT

வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு நடந்தே சென்று அமைச்சர் சேகர் பாபு புதிய வரலாறு படைத்துள்ளார்.

வெள்ளியங்கிரி திருக்கோவிலில்   அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன், உள்ளிட்ட அதிகாரிகளுடன் வந்த அவர் தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பிறகு வெள்ளியங்கிரியில் உள்ள 7 மலை ஏற்றம் பயணத்தை அமைச்சர் சேகர்பாபு துவங்கினார்வெள்ளியங்கிரி மலையில் உள்ள 7 மலைகளை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட முதல் துறை சார்ந்த அமைச்சர் சேகர்பாபு ஆவார்.

7 மலைகளுக்கு நடந்து சென்ற அவர் இறுதியாக சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, வசதிகள், குறிந்து வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து மீண்டும் மாலை கீழே இறங்கத்துவங்கிய அமைச்சர் சரியாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கீழே வந்தடைந்தார்.சுமார் 22 மணி நேரம் நடை பயணம் செய்த அமைச்சர் சேகர்பாபுவுடன் வனத்துறை, தீயணைப்புதுறை, மருத்துவர் குழுவினரும் மலையேற்றத்தின்போது உடன் இருந்தனர்.

நேற்று பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அவர் ஆய்வு செய்தார். அங்கு பக்தர்களுக்கான பேட்டரி வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, வெள்ளிங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவமாக இருந்தது. அதிக காற்று, அதிக குளிர் நிலவுகிறது. செங்குத்தான மலை பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடினமான சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.

newstm.in

Similar News