ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் தகவல்..!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் தகவல்..!
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், மத்திய அரசும் ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், “பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது” என்று, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.