கொரோனாவை அடுத்து மிரட்டும் குரங்கு அம்மை நோய்.. மக்கள் அதிர்ச்சி !
கொரோனாவை அடுத்து மிரட்டும் குரங்கு அம்மை நோய்.. மக்கள் அதிர்ச்சி !
உலக நாடுகள் இப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வருகிறது. எனினும் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவி வருவதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும் உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் தற்போது ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த நோய் அதிக அளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இது பாலியல் ரீதியாக பரவலாம் என கூறப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in