காதலரை கரம் பிடித்தார் பிரபல சீரியல் நடிகை..!

காதலரை கரம் பிடித்தார் பிரபல சீரியல் நடிகை..!;

Update: 2022-07-12 12:22 GMT

‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகி வந்த ‘யாரடி நீ மோகினி’ தொடரில் ’வெண்ணிலா’ என்கிற கேரக்டரில் நடித்தவர் நட்சத்திரா. தற்போது இவர், ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'வள்ளி திருமணம்' என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி, ‘நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், கட்டாய திருமணம் செய்யவுள்ளதாகவும், அவருடைய உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனையடுத்து, ஸ்ரீநிதியின் பேச்சை மறுத்து நட்சத்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நட்சத்திரா காதலிக்கும் விஷ்வா என்பவர் ‘ஜீ தமிழ்’ சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் சினிமா தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் விஷ்வா.

இந்நிலையில், விஷவா - நட்சத்திரா ஜோடியின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

நட்சத்திராவை தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அவருடைய ஒரே ஆசை, நட்சத்திராவை மாலையும் கழுத்துமாக பார்த்து விட வேண்டும் என்பதுதான்.

அதனால், தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா - விஷ்வா திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தாக கூறப்படுகிறது. சின்னத்திரை நண்பர்களுக்காக‌ விரைவில் சென்னையில் வரவேற்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News