நாட்டுக்கு பெருமை சேர்த்த மகன் நீரஜ் சோப்ரா.. ஆனந்த கண்ணீருடன் தாய் உற்சாக நடனம் !!

நாட்டுக்கு பெருமை சேர்த்த மகன் நீரஜ் சோப்ரா.. ஆனந்த கண்ணீருடன் தாய் உற்சாக நடனம் !!;

Update: 2022-07-24 11:52 GMT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி, தமிழக தலைவர் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நீரஜ் சோப்ரா வெற்றியை அவரது சொந்த ஊர் மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். 

நீரஜ் சோப்ராவின் வெற்றியை அறிந்ததும் வீட்டில் உறவினர்களுடன் அவரது தாயார் சரோஜ் தேவி  நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  அதனைத் தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சரோஜ் தேவி, நீரஜ் சோப்ராவின் கடின உழைப்பு பலன் அளித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறோம். நீரஜ் பதக்கம் வெல்வார் என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவுக்கான இந்த வெற்றியை நாங்கள் அனைவரும் கொண்டாடுகிறோம் எனக் குறிப்பிட்டார். 


 
நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரானா ஹரியாணாவின் பாட்னா பகுதியில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அமெரிக்காவில் 18ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தியுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



newstm.in
 

Tags:    

Similar News