புதிய சட்டம்! ஹெல்மெட் அணியாவிட்டால் அரசு சேவைகள் கிடையாது!!

புதிய சட்டம்! ஹெல்மெட் அணியாவிட்டால் அரசு சேவைகள் கிடையாது!!

Update: 2022-04-08 07:26 GMT

வரும் 18ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்படமாட்டாது என கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வரும் 18-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் எனவும்
இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது, அரசு மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரு சக்கரங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாவிட்டால் பணியாற்ற அனுமதிக்க கூடாது., ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக் கவசங்களை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையினை கரூர் மாவட்டத்தில் உருவாக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Similar News