பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்..!
பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்..!
தலைநகர் டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது பொதுக்குழுவில் புறக்கணிப்பு, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உள்ளிட்டவை குறித்து முறையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கூறியதை ஏற்றுக்கொண்டுதான் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.