அட கடவுளே.. சென்னையில் பால் விலை திடீர் உயர்வு… அதிர்ச்சியில் மக்கள் !

அட கடவுளே.. சென்னையில் பால் விலை திடீர் உயர்வு… அதிர்ச்சியில் மக்கள் !

Update: 2022-02-25 11:49 GMT

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாநிலம் சுமார் 45 சதவீதம் பால் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனங்களான ஜெர்சி, டோட்லா, ஹெரிடேஜ், திருமலா ஆகிய நிறுவனங்கள் பால் விலையை திடீரென உயர்த்தியுள்ளன.

அதாவது, பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால், திருமலா நிறுவனத்தின் முழு கிரீம் பால் 66 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் ஜெர்சி, டோட்லா, ஹெரிடேஜ் ஆகிய நிறுவனங்களின் பால் விலையும் உயர்கிறது. இந்த விலை உயர்வு பிப்.24 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பால் முகவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் முழு கிரீம் பால் 48 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் ஆவின் பால் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

 

newstm.in

Similar News