28ம் தேதியே.. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் சொன்ன நற்செய்தி..!
28ம் தேதியே.. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் சொன்ன நற்செய்தி..!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றன. இன்று காலை, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டசபையில் பேசும்போது கூறியதாவது;
“தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாய் நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து, ரசீது தரப்பட்டுள்ளன.
மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால் 3 நாட்களுக்கு முன்னதாக, மார்ச் 28-ம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன்” என்று கூறினார்.