விராட் கோலிக்கு பாக். வீரர் ஷோயப் அக்தர் ஆதரவு !!
விராட் கோலிக்கு பாக். வீரர் ஷோயப் அக்தர் ஆதரவு !!;
கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் என அழைக்கப்பட்ட விராட் கோலி, சமீப காலமாக ரன்சேர்க்கவே தடுமாறி வருகிறார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பரில் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷோயப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 70 சதங்கள் அடிப்பது ஒன்றும் கேண்டி க்ரஷ் விளையாட்டு போல அல்ல; ஒரு தலை சிறந்த வீரரால் மட்டுமே அத்தகைய சாதனையை செய்ய முடியும். விமர்சனங்கள் அனைத்தும் உங்களை வலுப்படுத்தவே செய்யும். நீங்கள் 110 சதங்களை அடிப்பீர்கள் எனது என் கணிப்பு, என ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிறிது காலத்துக்கு சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாதீர்கள் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
He needs to be backed. @imVkohli is one of the greats. https://t.co/YuBrwpRqw5
— Shoaib Akhtar (@shoaib100mph) July 16, 2022
newstm.in