அடுத்த இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..!!

அடுத்த இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..!!;

Update: 2022-06-02 05:05 GMT

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். இவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டது.மேலும் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அங்கு சில தினங்களுக்கு முன்பாக எரிபொருளின் விலையானது, வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு சுமார் 213 ரூபாயாக அதிகரித்தது.
 
எனவே, அங்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 605 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரு கிலோ நெய் 208 ரூபாய் அதிகரித்து, 555 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News