போதையில் மட்டையான பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்.. மக்கள் அதிர்ச்சி !!

போதையில் மட்டையான பாஜகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்.. மக்கள் அதிர்ச்சி !!

Update: 2022-07-20 19:08 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக்குமார் என்பவர் உள்ளார். இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பல்லடம் ராயர்பாளையத்தில் கடந்த 17ஆம் தேதி பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட,மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்தை முடித்து கட்சி தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது போதை தகைக்கேறிய நிலையில் இருந்த அவர் நடக்கமுடியாமல் இருந்துள்ளார். உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்கின்றனர்.

தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைராலகி வருகின்றது. பஞ்சாயத்து தலைவரும்,மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பாஜக கட்சி நிர்வாகி மதுபோதையில் இருந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in
 

Similar News