இவர்களுக்கெல்லாம் பாராசிட்டமால் மாத்திரை ஆபத்து! அதிர்ச்சி தகவல்!!

இவர்களுக்கெல்லாம் பாராசிட்டமால் மாத்திரை ஆபத்து! அதிர்ச்சி தகவல்!!

Update: 2022-02-09 07:00 GMT

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், இது தெரியவந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாராசிட்டமல் மாத்திரை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பாராசிட்டமல் மாத்திரை வழங்கி பரிசோதனை செய்ததில், ரத்த அழுத்தம் உயர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் அதிகரித்தது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 3 அலைகளிலும் அதிகம் விற்பனையான மாத்திரைகளில் பாராசிட்டமால் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் அனைவரும் பாராசிட்டமால் எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Similar News