மக்களே உஷார்...!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்..!!

மக்களே உஷார்...!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்..!!

Update: 2022-07-14 15:52 GMT

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய இருப்பதால்  அங்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்,  அதேபோல் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதேபோல்  நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 12  முதல் 20  செ.மீ அளவு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 23 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News