சென்னை மக்களே.. நாளை இங்கெல்லாம் மின்தடை !!
சென்னை மக்களே.. நாளை இங்கெல்லாம் மின்தடை !!
சென்னையில் நாளை (19.07.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர் பகுதி: உஸ்மாள் ரோடு பசூல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவகர்வால் நேரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரயில்வே பார்டர் ரோடு மற்றும் ஸ்டேஷன் வியூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நூகம்பலயம் மெயின் ரோடு.
அடையார் பகுதி: வேளச்சேரி மகேந்திரா ஷோரூம், ராதா பிளாட், பிரசாந் மருத்துவமனை, வேளச்சேரி மெயின் ரோடு கந்தசாவை சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, பாரதி நகர் முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதால் இப்பகுதி மக்கள் அதற்கு ஏற்றவாறு மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை திட்டமிட்டு முன்கூடியே முடித்துக்கொள்வது சிறந்தது.
newstm.in