சென்னை மக்களே உஷார்.. நாளை முக்கிய இடங்களில் பவர் கட் !!
சென்னை மக்களே உஷார்.. நாளை முக்கிய இடங்களில் பவர் கட் !!
சென்னையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரம்..
மயிலாப்பூர் பகுதி: லேடி வெல்லிங்டன் கேம்பஸ், பூரம்பிரகாஷ்ம் தெரு, ஐயம்பெருமாள் தெரு, நல்லண்னா லேன்.
தாம்பரம் பகுதி: புதுதாங்கல் தேவராஜ் பிள்ளை தெரு, நித்தியானந்தம் நகர், இரும்புலியூர் ஒரு பகுதி ஐ.ஏ,எப் அகஸ்தியர் தெரு, அஞ்சநேயர் கோயில் தெரு மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, சாந்தி நகர், இந்திரா நகர், அன்பு நகர், கே.கே சாலை, கோபாலபுரம், சுசீலா நகர் பம்மல் அனகபுத்தூர் முழுவதும், பம்மல் முழுவதும், பொழிச்சலூர் பகுதி முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி காரிடர் பகுதி: எம்.ஆர்.ஜி நகர், ஏ.கே.டி.ஆர் குல்ப், பாக்கியம் அப்பார்ட்மென்ட், வி.பி.ஜி அவென்யூ, சீனிவாசா அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி: ராமபுரம் வெங்கடேஸ்வரா நகர் 1 மற்றும் 2வது மெயின் ரோடு, வேலு நாயகர் தெரு, டி.என்.எச்.பி குடியிருப்பு போரூர் ராபிட் நகர், கோல்டன் எஸ்டேட், சக்தி அவென்யூ, குன்றத்தூர் ரோடு கோவூர் ஏரிக்கரை சாலை, தெற்கு மலையம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி: கிண்டி பகுதி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி, ஆதம்பாக்கம், பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மடிப்பாக்கம் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி, முகலிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை பகுதி: மணலி புதுநகர், எழில் நகர், கணபதி நகர், நாபாளையம், பென்னியம்மன் நகர், எம்.ஆர்.எப் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர் பகுதி: கே.எச் ரோடு, வசந்தா கார்டன், ஐ.சி.எப் திருமலை நகர், என்.எம்.கே நகர், கே.கே நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர்: வளசரவாக்கம் பகுதி, ஆழ்வார்திருநகர் பகுதி, விருகம்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி, கோடம்பாக்கம் பகுதி, சாலிக்கிராமம் பகுதி, அழகிரிநகர் பகுதி, அசோக்நகர், க.க நகர் பகுதி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி, தசரதபுரம் பகுதி, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
காலையில் பரபரப்பான நேரம் அலுவலகம், மாணவர்கள் பள்ளி, கல்லூரி புறப்படும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு மின்சார்ந்த அத்தியாவசியப்பணிகளை முன்பே முடித்துக்கொள்வது சிறந்தது ஆகும்.
newstm.in