அலறியடித்து வீதிக்கு ஓடிவந்த மக்கள்.. திடீர் நிலநடுக்கத்தால் பதற்றம் !!
அலறியடித்து வீதிக்கு ஓடிவந்த மக்கள்.. திடீர் நிலநடுக்கத்தால் பதற்றம் !!
பிலிப்பைன்ஸ், மலேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாடுகளின் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதேபோல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாயந்த் நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் மலேசியாவில் சிறிது சக்திவாய்ந்த அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
newstm.in