சென்னை, கோவை, திருப்பூர், தேனியில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை !
சென்னை, கோவை, திருப்பூர், தேனியில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை !;
சென்னையில் நாளை (27.07.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்தடை ஏற்படும் இடங்கள்.
மயிலாப்பூர் பகுதி : லஸ் நாட்டு வீராட்சி தெரு, கல்லுக்காரன் தெரு, பரிபூரண விநாயகர் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி: கடப்பேரி நியூ காலனி, நேரு நகர், அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, மகாதேவன் தெரு, நல்லப்பா தெரு மெப்ஸ் ஜோனில் உள்ள அனைத்து பகுதிகளும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தி நகர் பகுதி: மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு ஒரு பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
அம்பத்தூர் பகுதியில் அன்னை நகர் டி.வி.எஸ் நகர், லேக்வியூ கார்டன், காவியா நகர், சீனிவாசபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: கொளத்தூர் பூம்புகார் நகர், சாய் நகர், தென்பழனி நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இதேபோல், கோவை மாவட்டத்தில் இருகூரில் நாளை (ஜூலை 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா்.
பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம்(ஒரு பகுதி), வெங்கிட்டாட் புரம், தொட்டிட் பாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டத்துக்கு உட்பட்ட பெரியாா் நகா், புதுப்பையில் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை வரை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. காங்கேயம் கோட்டம் பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரபராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டிட் , எல்.கே.சி.நகா், கா் அண்ணா நகா், கா் ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஆா்ஜி.வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுட் ப்பாளையம், செந்தலையாம்பாளையம்.
புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு,
மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா் , நாச்சிச்பாளையம், நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள வைகை அணை உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newsm.in