சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!
சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக நகரின் பிரதான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தரமணி-பெருங்குடி பகுதி: இராமப்பா நகர், சர்ச் பிரதான சாலை, அப்போலோ மருத்துமனை, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் – கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, காமாட்சி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி-செங்குன்றம் பகுதி: விவேக்பார அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், வடிவேல் நகர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
சோத்துபெரும்பேடு பகுதி: அலிமேடு, பள்ளசூரப்பேடு, மேட்டுசூரப்பேடு, மேட்டுகாலனி மற்றும் வட்டிகாரன்பாளையம்.
கொளத்தூர் பகுதி: ராஜஸ் அபார்ட்மெண்ட், சாந்திகாலனி, செந்தில் அவென்யூ, காந்திமதி தெரு, சீனிவாசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலையில் மின்தடை ஏற்படுவதால், அதற்கு ஏற்றவாறு மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.
newstm.in