ரோஜா மகளுக்கு குவியும் பாராட்டு... ஏன் தெரியுமா?
ரோஜா மகளுக்கு குவியும் பாராட்டு... ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை ரோஜா இப்போது சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சினிமா பிரபலங்கள் வாரிசுக்கு சினிமாவில் ஆசை இருப்பது இயல்பான ஒன்று. ஆனால் ரோஜாவின் மகள் அனுஷூ மல்லிகாவுக்கு எழுதுவதில் தான் ஆர்வம் அதிகம்.
வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டிங்கில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதோடு இவர் சிறந்த எழுத்தாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் “தி ஃப்ளேம் இன் இவர் ஹார்ட்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இது ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. 19 வயதில் புத்தகம் எழுவதும் எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அனுஷூ எழுதிய புத்தகத்திற்கு தற்போது விருதும் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது ரோஜாவின் ஒரே மகளுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் சஜன் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார்.
newstm.in