பொதுச்சுவர் தகராறு.. தாய், மகள் மீது ஆசிட் வீச்சு

பொதுச்சுவர் தகராறு.. தாய், மகள் மீது ஆசிட் வீச்சு;

Update: 2022-07-20 16:52 GMT

பொதுச்சுவர் தகராறில் தாய், மகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் வீடு கட்டியதில் பொதுச்சுவர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பொதுச்சுவர் தகராறில் நேற்று இரவு இரு வீட்டார் இடையேயும் தகராறு ஏற்பட்டது,

இதில் வீட்டில் இருந்த தாய், மகள் மீது பக்கத்து வீட்டுக்கார பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் வலியால் துடித்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நள்ளிரவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அப்பெண் ஆசிட் வீசியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவருக்கு ஆசிட் கிடைத்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. 

newstm.in

Tags:    

Similar News