25 வயசுக்குள் கல்யாணம் பண்ணலைனா மக்களே கொடுக்கும் தண்டனை.. சூப்பர் பழக்கம் !
25 வயசுக்குள் கல்யாணம் பண்ணலைனா மக்களே கொடுக்கும் தண்டனை.. சூப்பர் பழக்கம் !;
பரந்து விரிந்த இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில சம்பவங்கள் விசித்திரமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் உலகளவில் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும். அதில் சிலவைகள் நம்மால் ஏற்க முடியாத வகையிலும் அமையும்.
எனினும் அவற்றை நம்பும் மக்கள் தொடர்ந்து அந்த பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அவ்வகையில் டென்மார்க்கில் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் பெரும் வியப்புக்குரியதாக உள்ளது. அதாவது, 25 வயதிற்குள் திருமணம் செய்யாதவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடி குளிப்பாட்டும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.
அதாவது டேனிஸ் சமுதாயத்தில் 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் போது இளைஞர், இளம்பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் 25ஆவது பிறந்த நாளை கொண்டாடும் போது அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடியால் குளிப்பாட்டுவார்கள். இது விசித்திரமான தண்டனை என்றாலும் மக்கள் தங்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.
newstm.in