திரைப்படத்தை மிஞ்சிய தரமான சம்பவம்…காத்து வாக்குல மூன்று காதல்..!!

திரைப்படத்தை மிஞ்சிய தரமான சம்பவம்…காத்து வாக்குல மூன்று காதல்..!!

Update: 2022-05-04 13:45 GMT

மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 42 வயதான மணமகன் சர்பஞ்ச் , போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார்.இவர் மூன்று பெண்களை பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார் . மேலும் அவர் அந்த பெண்களுடன் திருமணம் செய்யாமலே ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் .

இந்நிலையில் அந்த மூன்று காதலிகளையும் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான நாள் குறிக்கப்ட்டது . பிறகு குறித்த நாளில் அந்த மூன்று காதலிகளுடன் நடைபெற்ற திருமணத்தில் அவர்களுக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளனர்.மோரி பாலியா கிராமத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் , சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி தற்போது பேச்சு பொருளாக மாறியுள்ளது.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால் ஒரே மேடையில் வைத்து அவர் மூன்று பெண்களுக்கும் தாலி கட்டி ,மூவருடன் ஒரே நேரத்தில் முதலிரவும் நடத்தியுள்ளார்.இந்த திருமணம் பற்றி மணமகன் கூறுகையில் ,தான் 2003ம் ஆண்டு எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு காதலிகளும் திருமணமாகாமலே தன்னுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Similar News