70 வயதில் ஓய்வு பெறும் ராணி இரண்டாம் எலிசபெத் !!
70 வயதில் ஓய்வு பெறும் ராணி இரண்டாம் எலிசபெத் !!;
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(96) வயது மூப்பு காரணமாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகிறார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை இளவரசர் சார்லஸ் இடம் மாற்றி வருகிறார். இதன் முதல் படியாக ஆண்டுதோறும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஹவுஸ்ஸ் ஆஃப் லார்ட்ஸ் அவையில் நடைபெறும் திறப்பு விழாவில் இந்த ஆண்டு அவர் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் நாடாளுமன்ற திறப்புவிழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்புரையாற்றிய வருகிறார். இந்த நடைமுறை இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 70 ஆண்டுகளாக ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் நாடாளுமன்ற செயல்பாடுகளில் தனது பங்கினை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில் வயது மூப்பு காரணமாக பொறுப்புகளை மகன் சார்லஸ் இடம் ஒப்படைத்தார். அந்த வகையில், நாடாளுமன்ற அவையில் இந்தாண்டு தனக்கு பதிலாக இளவரசர் சார்லஸ்-ஐ விழாவில் கலந்துகொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தாண்டு இளவரசர் சார்லஸ் ராணியின் உரையை வாசித்து, ஒவ்வொரு மசோதாவையும், ராணியின் இந்த அரசு மேற்கொள்ளும் என கூறினார்.
தனது 70 ஆண்டுகால பொது வாழ்வில் 1959, 1963ஆம் ஆண்டு ஆகியவற்றில் மட்டும் தான் இந்த நிகழ்வில் பங்கேற்றதில்லை. இந்த இரு ஆண்டுகளிலும் இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.ஆண்டுதோறும் இந்த விழாவில் ராணி சராட் வண்டியில் வந்து, பாதுகாவலர்கள் சீருடையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதை காண பலரும் திரளுவது வழக்கமாகும்.
இந்தாண்டு ராணியின் பிறந்தநாளும், அவர் அரியணையில் ஏறிய 70ஆவது ஆண்டும் ஒன்றாக வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் இந்த நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
newstm.in