இந்தியாவில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு..!!

இந்தியாவில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு..!!;

Update: 2022-06-15 05:40 GMT

பூமியில் வாழ்ந்த டைனோசர்களைப் பற்றி பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு வெளியான பல ஆய்வுகளில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று பூமியை தாக்கியதால் டைனோசர்கள் முழுமையாக அழிவை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், சான்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

அப்படி தான், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தில் உள்ள டைனோசர் புதை படிவ தேசியப் பூங்காவில் நடத்திய ஆய்வில் புதை படிவ டைனோசர் முட்டைகளின் தனித்துவமான தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி தொடர்பாக நேச்சர் குரூப் என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தேசிய பூங்காவில் புதிய வகை டைனோசர் முட்டைகள் மொத்தம் 52 கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கூடுகளில் ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் இதுவரை இல்லாத வித்தியாசமான முட்டைகளும் அடக்கம். 

இந்த வகை முட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு, அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இதுவரை டைனோசர் முட்டைகளில் பார்த்திராத அம்சம் இது. முட்டைகளுக்குள் முட்டை இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படுமே தவிர, ஊர்வனவற்றில் இவரை காணப்பட்டது இல்லை. எனவே, இந்த புதிய வகை கண்டுபிடிப்பு மூலம் டைனோசரின் இனப்பெருக்கம், கூடு கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து புதிய வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த முட்டைக்குள் முட்டை கண்டுபிடிப்பு டைட்டானோசவுரிட்களில் உள்ள பறவைகளின் பண்புகளைக் காட்டுவதாக அமைந்துள்ளது. டைட்டானோசவுரிட் கூட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ள இது சௌரோபாட் டைனோசர்கள் முதலைகள் அல்லது பறவைகளைப் போன்ற கருமுட்டை உருவ அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்பதைக் கூறுவதாக அமைந்துள்ளது” என்றனர்.

Tags:    

Similar News