ரெப்போ விகிதம் 0.50% உயர்வு..!!

ரெப்போ விகிதம் 0.50% உயர்வு..!!

Update: 2022-06-09 18:44 GMT

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரெப்போ விகிதம் 4.4 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. கையிருப்பு பண விகிதம் (CRR) 4.5 சதவீதமாக பராமரிக்கப்படுகிறது. பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகித உயர்வால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயரும். இந்த முறை ரெப்போ விகிதம் உயரும் என்று சக்திகாந்த தாஸ் முன்பு கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி, நாணயக் கொள்கைக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு, மே மாதம் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை 0.40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியபோது, ​​வங்கிகளும் கடன் மற்றும் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தின. இப்போது ஜூன் மாதத்தில் 0.50 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது.

ரெப்போ ரேட் என்பது வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியால் பயன்படுத்தப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் விகிதமாகும். தற்போது ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் மே 2020 முதல் மாறாமல் உள்ளது.

Similar News