வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அவசர எச்சரிக்கை..!
வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அவசர எச்சரிக்கை..!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கும் அவசர எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என எஸ் எம் எஸ் வந்தாலோ, அல்லது யாராவது உங்கள் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவல் சொன்னாலும் அதை பொருட்படுத்த வேண்டாம்.
மேலும் உங்கள் தனிப்பட்ட வங்கி விவரங்களை கேட்டு வரும் மின்னஞ்சல் மற்றும் ஏதாவது லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம்.
இது தொடர்பாக ஏதாவது தகவல் வந்தால் report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.