முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டும் எஸ்.ஐ கணவன்.. இளம்பெண் பகீர் புகார் !!
முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டும் எஸ்.ஐ கணவன்.. இளம்பெண் பகீர் புகார் !!
திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி மாவட்ட ஆசியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் , 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர்.
அதன்பிறகு சில நாட்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இளவரசியின் விருப்பதிற்க்கு மாறாக மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார். மேலும், அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாகவும், திருமணம் முடிந்து 14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில் உனது கணவரின் பெண் தோழி எனக்கூறி ஆபாசமாக பேசியுள்ளார்.
அதே எண்ணில் இருந்து ஆறுமுக நயினாரும், சந்தர்ப்ப சூழலால், உன்னை திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. நீ ரொம்ப ஆசைப்படாதே , முடிந்தால் எங்கள் வீட்டில் இரு இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மிரடியுள்ளார். இதனையடுத்து இளவரசியின் தாய் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர்.
அவர்களும் தன் மகன் எஸ்பி வரை பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன எங்கள் தகுதி என கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர். ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்துகொண்டு , முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
newstm.in