பேருந்தில் பீர் குடித்து அதகளம் செய்த பள்ளி மாணவிகள்! வீடியோ!!

பேருந்தில் பீர் குடித்து அதகளம் செய்த பள்ளி மாணவிகள்! வீடியோ!!

Update: 2022-03-25 09:21 GMT

தமிழக அரசு பள்ளி மாணவிகள் பேருந்துக்குள் பீர் குடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது மாணவர்களை நேரில் அமர வைத்து பாடம் எடுப்பதில் ஆசிரியர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் உடைகளும்,பழக்க வழக்கங்களும் முழுவதுமாக மாறிவிட்டன. இப்போது பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சட்டை பட்டனை கழட்டி விட்டு, புள்ளிங்கோ ஸ்டைலில் வருவதால், ஆசிரியர்கள் கண்டிக்கவே பயன்படுகின்றனர்.

இந்நிலையில், மாணவிகளோ நாங்களும் சளைத்தலைவர்கள் இல்லை என்று ஓடும் பேருந்துக்குள் பீர் குடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்  பொன்விளைந்தகளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் அரசு பேருந்தில் மது அருந்தி அட்டகாசம் செய்ததாக அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


newstm.in

Similar News