சிவசேனா எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார்..!!

சிவசேனா எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார்..!!

Update: 2022-05-12 13:45 GMT

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார். அவரது கட்சியை சேர்ந்த ரமேஷ் லத்கே, அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.  இதையடுத்து அவர் காலமானார்.  கடந்த 2014-ம் ஆண்டு மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் ஷெட்டியை வீழ்த்தினார்.

இதன்பின்னர் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான எம். பட்டேல் என்பவரை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார். இவருக்கு முதல்வர், சிவசேனா கட்சி உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News