அதிர்ச்சி! 20% வரை உயரும் மின் கட்டணம்!!
அதிர்ச்சி! 20% வரை உயரும் மின் கட்டணம்!!
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு எரிபொருள் அட்ஜஸ்மென்ட் கட்டணத்தை (எப்.ஏ.சி.) விதிக்க மின் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா மாநில மின் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.இ.ஆர்.சி.) ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதையடுத்து அங்கு 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதாவது யூனிட்டுக்கு சுமார் ரூ.1 அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த மின் கட்டண உயர்வு இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு மின்சார கட்டண உயர்வு பேரிடியாக அமைந்து உள்ளது.
newstm.in