அதிர்ச்சி! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா மாஸ்டர்!!
அதிர்ச்சி! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா மாஸ்டர்!!
சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடம்பாக்கத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் சந்தானம் (57) கடந்த 7 ஆண்டுகளாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுத் தருவதாக மாநகராட்சி பள்ளியில் யோகா வகுப்பு நடத்தி வந்துள்ளார்.
இவர் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் மதியம் உணவு இடைவெளியில் 10, 11. 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் யோகா கற்றுத் தருகிறேன் என்ற பெயரில் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் பேசி ஒருசில மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல வாரிய குழு உறுப்பினர் லலிதாவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் விசாரணை செய்து இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார்.
வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா மாஸ்டர் சந்தானத்தை கைது செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in