திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடு!!
திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடு!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான வழிபடச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு அதன் விலையை உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம், பக்தர்கள் எத்தனை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
இதையடுத்து, அதிக அளவு லட்டு பிரசாதத்தை பக்தர்கள் வாங்கிச்சென்ற நிலையில், அதற்கு ஏற்றார்போல் உற்பத்தி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க தேவஸ்தானம் வழங்கும் ஒரு லட்டுடன், பக்தர்கள் கூடுதலாக 2 லட்டுகளை மட்டும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கு முன் லட்டு பிரசாதத்தின் விலையை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் இனிமேல் எத்தனை லட்டு தேவை என்றாலும் கவுண்டரில் நேராக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
அப்போது முதல் அதற்கு முன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்த லட்டு ஒன்று 50 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய லட்டு ஒன்று 200 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வடை பிரசாதம் 100 ரூபாய்க்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் அதற்கு ஏற்ற வகையில் லட்டு உற்பத்தி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே திருப்பதி மலையில் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே பக்தர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு உரிய ஒரு லட்டு தவிர கூடுதலாக தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
newstm.in