சென்னை திரும்பும் சிம்பு.. டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
சென்னை திரும்பும் சிம்பு.. டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்;
உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த மாதம் உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது வயிற்று பகுதியில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அதற்கான முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அதற்கான வேலைகளை டி.ராஜேந்திரன் மகனும் நடிகருமான சிலம்பரசன் முன்கூட்டியே அமெரிக்கா சென்று கவனித்து வந்தார்.
இந்த நிலையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா மற்றும் மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது மகன் சிம்பு உடனிருந்து டி.ராஜேந்தரை கவனித்துக்கொண்டார்.
இந்த நிலையில் டி.ராஜேந்தர் முற்றிலும் குணமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்கள் அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
தற்போது சிம்பு தனது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை திரும்புகிறார். வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ள சிம்பு, தற்போது பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
newstm.in