தூங்குவதில் இட பிரச்னை… இளைஞர் சம்மட்டியால் அடித்துக் கொலை!!
தூங்குவதில் இட பிரச்னை… இளைஞர் சம்மட்டியால் அடித்துக் கொலை!!
தருமபுரியில் தூங்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையில் வட மாநில இளைஞர் அடித்தக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அடுத்த மாரவாடி பகுதியில் தனியார் கிரானைட் தொழிற்சாலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபாய் (20) மற்றும் ஆதித்யா சௌந்தர்யா (40) என்ற இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் இருவம் ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
இரவு நேரத்தில், இருவரும் இணைந்து மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் மது அருந்தி கொண்டிருந்த போது இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதை அறிந்த கிரைனைட் உரிமையாளர் இருவரையும் தொழிற்சாலையில் இருந்து வெளியில் அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து கிரானைட் கம்பெனி உரிமையாளருக்கு தெரியாமல், வந்து தங்கியுள்ளனர். அப்போது மதுபோதை அதிகமானதில் உறங்கும் இடத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து பாபாய் ஓரிடத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது ஆதித்யா சௌந்தர்யா, பெரிய சம்மட்டியால் பாபாய் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மூளை சிதறி நிலையில் பாபாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர் சமட்டியை வீசிவிட்டு ஆதித்யா சௌந்தர்யா அங்கிருந்து தப்பினார். இதனை தொடர்ந்து வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பாபாயை பார்த்து, உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாபாய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்து, கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார்.
இந்த தனிப்படை காவல் துறையினர், குற்றவாளியை பிடிக்க பெங்களூர் விரைந்தனர். தருமபுரி அருகே கிரானைட் கம்பெனியில், வட மாநில தொழிலாளி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in