பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!!
பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!!
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ராஜபக்ச குடும்பம் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் 26 கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவுக்கு புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.
நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சி திரும்பப் பெற்றுள்ளது.
இலங்கை அரசிலிருந்து விலகுவதென இலங்கை சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், லசந்த அலகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இணை அமைச்சர் பதவிகளிலிருந்து விலகுவது என்று முடிவு செய்திருப்பதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கேபினட் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே பதவி விலகிவிட்ட நிலையில், இணை அமைச்சர்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
newstm.in