மாணவர்களே மறந்துடாதீங்க.. கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்..!

மாணவர்களே மறந்துடாதீங்க.. கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்..!;

Update: 2022-07-27 05:20 GMT

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கடந்த மாதம் முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்கக் கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, கல்லூரிகளில் சேர்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ம் தேதி வெளியானது. அதன் பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, இன்று  (27-ம் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதே போல, 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இன்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில், இன்று  மாலையுடன் அவகாசம் முடிகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ - மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Similar News