அந்தமானில் திடீர் பரபரப்பு.. அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்! !!
அந்தமானில் திடீர் பரபரப்பு.. அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்! !!;
ஆசிய நாடுகளில் சமீபகாலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஈராக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது லேசான பாதிப்பு ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கடைசியாக இன்று பிற்பகல் 3.02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியாவின் சில நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
newstm.in