சூப்பர் திட்டம்.. இருசக்கர வாகனத்திற்கு 50% மானியம்... உடனே விண்ணப்பிக்கலாம் !!
சூப்பர் திட்டம்.. இருசக்கர வாகனத்திற்கு 50% மானியம்... உடனே விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசாணை எண் .13-ன் படி விண்ணப்பிக்க தகுதி வரிசை எண் 1 மற்றும் 2 ல் கீழ்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
1) ஏற்கனவே வயது வரம்பு 18 - லிருந்து 40 ஆக இருந்தது.தற்போது வயது வரம்பு 18 - லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது .
2) ஏற்கனவே கல்வி தகுதி 8ம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி) இருந்தது. தற்போது கல்வி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
3) தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ப்பு நிறுவனங்களில் மனுதாரர் விண்ணபிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்.
4) தமிழ்நாட்டை சார்ந்தரவாக இருத்தல் வேண்டும்.
5) விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
6) பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் 1. பேஷ் இமாம் 2. அராபி ஆசிரியர்கள் 3. மோதினார் 4. முஜாஜர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- வயது சான்றிதழ்
- வாக்காளர் அடையாள அட்டை
- புகைப்படம்
- சாதி சான்று
- புகைப்படம் மாற்று திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் சான்று
- ஓட்டு உரிமம் கல்வித் தகுதி சான்றிதழ் ( குறைந்தபட்சம் 8வது தேர்ச்சி/தோல்வி)
- வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல்
- சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.
வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி
மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (முதல் தளம்), மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
newstm.in