டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!!;

Update: 2022-07-14 15:13 GMT

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24-ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களில், ஆஃப்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கு வரும் போது தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு ஹால் டிககெட்வுடன், ஆதார் அட்டை உள்ளிட்ட எதாவது ஒரு அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். இந்த தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த தேர்விற்கு இதுவரை 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News