தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் காலமானார்..!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் காலமானார்..!

Update: 2022-06-17 12:20 GMT

தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பி.கே.இளமாறன். இவர், கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அத்துடன், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்தார்.


இந்நிலையில், இன்று (17-ம் தேதி) காலை அவர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆசிரியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Similar News