விளக்கம் கேட்டு 987 பள்ளிகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ்!!
விளக்கம் கேட்டு 987 பள்ளிகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ்!!
அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கலவரத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சி பி.எஸ்.இ ,மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தனர். ல் தங்களின் அனுமதியில்லாமல் பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளிகள் மூடப்பட்ட மற்றும் செயல்பட்ட தனியார் பள்ளிகளின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டார்.
நெல்லை, கரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் செயல்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11,335 பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே செயல்படவில்லை.
அந்த வகையில் தமிழகத்தில் 91 சதவிகிதம் பள்ளிகள் இயங்கியுள்ளன 9 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கவில்லை. இந்தப் பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை விட்டன.
எனவே, விடுமுறை அளித்தது குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் எனவும்,பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
newstm.in