வரி ஏய்ப்பு புகார்.. எம்.ஜி.எம் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை..!
வரி ஏய்ப்பு புகார்.. எம்.ஜி.எம் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை..!
தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தீம் பார்க் நடத்தி வரும் எம்.ஜி.எம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.